search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயலலிதா மரணம் விசாரணை"

    • நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி அறிக்கையை அரசிடம் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ந் தேதி சமர்ப்பித்தார்.
    • ‘ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவரது சாவில் மர்மம் உள்ளது என்று பலர் குற்றச்சாட்டு சுமத்தினர். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவருக்கு வழங்கப்பட்ட 75 நாட்கள் சிகிச்சைகளுக்கும், அவரது மரணம் குறித்த சந்தேகங்களுக்கும் விடைகாணும் வகையில் ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு அரசு 2017-ம் ஆண்டு அமைத்தது.

    அதன்படி, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி அறிக்கையை அரசிடம் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ந் தேதி சமர்ப்பித்தார்.

    அதில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக வி.கே.சசிகலா, டாக்டர் சிவக்குமார், சுகாதாரத்துறை முன்னாள் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி வேலூர், திருச்சி தினமலர் பதிப்பாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனுவில், 'ஆணையம் அறிக்கை தாக்கல் செய்து பல மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நடவடிக்கை எடுக்க கோரி மத்திய, மாநில அரசுகளுக்கும், சி.பி.ஐ.க்கும் மனு கொடுத்தேன். இந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.

    இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ ரீதியாக குற்றச்சாட்டுகள் உள்ளதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு சுகாதாரத்துறை ஆலோசித்து வருகிறது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு எந்த ஒப்புதலும் இதுவரை அரசு வழங்கவில்லை என்று கூறினார்.

    அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், 'ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை சி.பி.ஐ., சட்டத்தின் அடிப்படையில் பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் துணை ஜனாதிபதியிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்ப உள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission

    சென்னை:

    ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு திடீர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சை பெற்ற அவருக்கு என்ன செய்தது? எத்தகைய சிகிச்சை கொடுத்தார்கள்? என்பன போன்ற வி‌ஷயங்களில் மர்மம் நிலவுகிறது.

    ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது முதல் மரணம் அடைந்தது வரை மர்மங்கள் நிலவுகிறது. இதில் உண்மையை கண்டு பிடிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த ஆணையம் சார்பில் கடந்த ஆண்டு முதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவுடன் பழகியவர்கள், சிகிச்சை அளித்தவர்கள், அதற்கு ஏற்பாடு செய்தவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் விசாரணை நடக்கிறது.

    இதுவரை சுமார் 100 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் அளித்த தகவல்கள் வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை எல்லையை விரிவுபடுத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது அவரது சிகிச்சை குறித்து நேரில் சென்று கேட்டறிந்த துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவ் இருவரையும் அழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.


    ஜெயலலிதா உடல் நிலையை வெங்கையா நாயுடு விசாரிக்க வந்தபோது அவர் மத்திய மந்திரியாக இருந்தார். தற்போது துணை ஜனாதிபதியாக இருப்பதால் அவரை விசாரணை ஆணையத்துக்கு அழைக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி துணை ஜனாதிபதி மற்றும் முன்னாள் கவனர்ருக்கு சம்மன் அனுப்ப உள்ளனர். இதற்கிடையே தலைமை செயலாளர் உள்பட பலரிடம் தகவல் தரும்படி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

    இந்த நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் அழிந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. இது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் சுப்பையா விசுவநாதன் வரும் 25-ந்தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தகவல்கள் அளிக்க உள்ளார். அவரிடம் சசிகலா வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தவுள்ளார். #JayaDeathProbe #ArumugasamyCommission

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது. #jeyalalithadeath #arumugasamycommission #gurumurthy
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து எழுந்த சந்தேகத்தை அடுத்து முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை  நடைபெற்று வருகிறது.


    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதம் நீட்டித்து தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2-வது முறையாக ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    பா.ஜ.க. ஆதரவாளரும், ஆடிட்டர் குருமூர்த்தி வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், மருத்துவர் சிவக்குமார்  ஜூன் 25 , மருத்துவர் நளினி, செவிலியர் பிரேமா ஆன்டனி 26-ம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  #jeyalalithadeath #arumugasamycommission #gurumurthy
     
    ×